×

மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ 24ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்

சென்னை: மதுரையில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை’ வரும 24ம் தேதி திறந்து வைக்க மதுரை, அலங்காநல்லூர் வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர். புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் – வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவுதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” 24ம் தேதி திறந்து வைத்து போட்டிகளை காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்.எக்காலத்திலும் பண்பாட்டைக் காப்போம்.

The post மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ 24ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Artist Centenary Climbing Hall ,Madurai ,Chennai ,M. K. Stalin ,Alankanallur ,Artist Centenary Climbing Arena ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...